எமது நோக்கு
சமத்துவமான நிறைவான ஈர்ப்புமிக்க தீபகற்பம்.
எமது கொள்கை
அரச கொள்கைகளுக்கு அமைவாக சேவைகளை வழங்குதல், வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் வினைத்திறன்மிக்கதும், நீண்டு நிலைக்கக் கூடியதும், திட்டமிடப்பட்டதுமான செயற்பாட்டினூடாக பிரதேச மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தல்.
அறிமுகம்
வடமேல் மாகாணத்தில், புத்தளம் மாவட்டத்தின் வடமேற்கு திசை கடல் பிரதேசத்தில் வடக்கில் மன்னார் கடலை எல்லையாகவும், கிழக்கில் வண்ணாத்திவில்லு மற்றும் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லைகளாகவும், மேற்கில் இந்து சமுத்திரத்தை எல்லையாகவும், தெற்கில புத்தளம் மற்றும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லைகளாகவும் கொண்ட 154 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினையுடைய ஒரு தீபகற்ப பிரதேசமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவு அமையப் பெற்றுள்ளது. இப்பிரதேச செயலகப்பிரிவானது 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், நிலப்பகுதியை தவிரவும் கடற்பரப்பில் அமைந்துள்ள 14 தீவுகளும், நீரேரியில் அமையப்பெற்றுள்ள 17 அழகிய தீவுகளும் இப்பிரிவுக்குற்பட்டவைகளாக உள்ளன. இத்தீவுகளுள் டச்பே மற்றும் பள்ளியவத்த ஆகிய தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுவதுடன் நிரந்தர குடியிருப்பாளர்களை தவிர இடம்பெயர்ந்த மீனவர்கள் அதிகமானோர் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மாத்திரமே தீவுகளில் வந்து குடியமர்ந்து தங்களது கடற்றொழில்களை மேற்கொள்கின்றனர்.

இலங்கையில் காணப்படும் இரண்டு தீபகற்பகங்களுள் ஒன்றான கல்பிட்டி தீபகற்பமானது புத்தளம் மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள மிக நீண்ட கடற் கரையினைக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவாக உள்ளது. இக்கடற்கரையின் நீளமானது 71.8 மீற்றர்களாக உள்ளது. இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய கடலேரியான புத்தளம் கடலேரியினையும் இப்பிரதேச செயலகப் பிரிவு எல்லையாக கொண்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மிகவும் ஈர்ப்புமிக்கதோர் பிரதேச செயலகப் பிரிவு இதுவாகும்.
தரைகீழ் தோற்ற அமைப்பை நோக்கும் போது சுண்ணாம்புக்கற்பாறை ஒன்றின் மீது மணல் குவிந்ததன் மூலம் தோற்றம் பெற்ற இப்பிரதேசத்தினுள் ஆலங்குடா, ஆண்டாங்கன்னி மற்றும் ஏத்தாலை போன்ற பிரதேசங்களில் மணல் குன்றுகள் காணப்படுகின்றன. தீவுகளை எடுத்துக்கொண்டால் பள்ளியவத்த தீவு மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாகி வருவதுடன் தற்போது மிகச் சிறிய நிலப்பகுதியே மீதமாகக் காணப்படுகின்றது. இப்பகுதியில் நிலக்கீழ் நீர் 05 அடி ஆழத்தில் காணப்படுகின்றது. விவசாயத்திற்காக அதிகளவிலான செறிவினைக் கொண்ட இரசாயன பதார்த்தங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் விளைவாக இப்பிரிவில் குடி நீர் தோற்றுவாய்கள் வரையரைக்கப்பட்டு காணப்படுகின்றமை மற்றும் கிடைக்கப் பெறக்கூடிய நீரிலும் நைட்ரேட்டு செறிவு அதிகமாக காணப்படுவதால் சுத்தமான நீரை தேடுவதில் சிரமம் ஏற்படுகினறமை போன்ற நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

இப்பிரதேச செயலகப் பிரிவில் பல்வகை சமயங்களை அனுஷ்டிக்க கூடிய பல்லின மக்கள் வாழ்ந்து வருவதுடன் அவர்கள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய இனத்தவர்களாக இருக்கின்றனர். சமயங்களை பொருத்த வரையில் பௌத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம், இந்து மற்றும் ஏனைய மதங்களை சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். எனவே, இப்பிரிவானது பல்லின, பல் சமய மக்கள் வாழும் பிரிவாக உள்ளது. வரலாற்றுத் தகவல்களை நோக்கும் போது இயற்க்கை துறைமுகமான மன்னார் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கப்பல்கள் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது கல்பிட்டி பிரதேசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி முற்பட்ட காலத்தில் ஏத்தாலை மற்றும் தில்லையடி ஆகிய பிரதேசங்களில் இருந்து உப்பு சேகரிக்கப்பட்டு கப்பல்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன் தலவில புனித அன்னம்மாள் தேவாலயம், கப்பலடி முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் கப்பலடியில் கிடைக்கப்ப பெற்ற புனித பாதச்சுவடு பதிந்த கற்பதாகை ஆகியன முன்னய காலத்தில் இப்பிரிவில் நடைபெற்ற சமயங்கள் தொடர்பான முன்னேற்றத்தினை எடுத்துக்காட்டும் தெளிவான காரணிகளாக உள்ளன.

புராண கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லிராணி மாளிகையும் இப்பிரிவிலேயே அமையப் பெற்றுள்ளது. இபுன் பதூதா அவர்களின் உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கல்பிட்டியின் அரச மரமானது தற்போது இலங்கை கப்பற்படையின் முகாமுக்கு அருகாமையில் காணப்படும் அரச மரம் என கருதப்படுகினறது. மேலும், கடற்படையினரால தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒல்லாந்தரின் கோட்டையானது இலங்கை வரலாற்றையும் கல்பிட்டி பிரதேசத்தையும் நேரடியாக தொடர்பு படுத்தக்கூடிய ஒரு காரணியாக அமைந்துள்ளது. மேலும் இப்பிரிவில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின்உற்பத்தி நிலையம் மூலமாக தேசிய மின்வலு கட்டமைப்பிற்கு 900 மெகாவொட் அளவிலான மின்சாரம் வழங்கப்படுகின்றது. இலங்கை பேணத்தகு மின்வலு அதிகார சபையினால் இப்பிரதேச செயலகப் பிரிவானது மின்வலு உற்பத்திக்கான பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள காற்று மின் உற்பத்தி நிலையத்தினால் 50 மெகாவொட் அளவிலான மின்சாரமானது தேசிய மின்வலு கட்டமைப்பிற்கு சேர்க்கப்படுகின்றது.

மேலும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1508/18 ஆம் இலக்க 2007.08.01 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கல்பிட்டி பிரதேசமானது சுற்றுலா வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கைட் சர்பிங் விளையாட்டுகள், டொல்பின மற்றும் திமிங்கிலங்கள் போன்ற முலையூட்டிகளை பார்வையிடுதல் போன்றவற்றுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றார்கள். இப்பிரதேசத்தில காணப்படும் தீவுகள் மேலும் அழகூட்டக்கூடியனவாக உள்ளன. அதேபோன்று இப்பிரதேசத்தில் மலைநாட்டு மற்றும் கீழத்தேய மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் பப்பாசி, கொய்யா, மாதுளை, டிராகன் புருட் போன்ற பழவகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனடிப்படையில் இப்பிரதேசமானது நாட்டின் தேசிய பொருளாதரத்திற்கு பல்வேறுபட்ட கோணங்களில் இருந்தும் பெரும் பங்களிப்பினை வழங்கும் புத்தளம் மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஈர்ப்புமிக்க தீபகற்பமாகவும், பிரதேச செயலகப் பிரிவாகவும் காணப்படுகின்றது.

இது வரைக்கும் சேவைகளை வழங்கிய / வழங்கிக் கொண்டிருக்கின்ற பிரதேச செயலாளர்கள்
| பெயர் | இருந்து | வரை |
|
திரு. டப்ளியு. எல். சி. லோவ் |
||
|
திரு. ஈ. டப்ளியு. இளயப்ப ஆரச்சி |
||
|
திரு. என். ஏ. ஏ. புஷ்பகுமார |
||
|
திரு. டப்ளியு. ஜே. லோவ் |
||
|
திரு. சார்ல்ஸ் பெரேரா |
||
|
திரு. எல். ஜே. எம். ஜீ. சி. பண்டார |
2005.03.04 | |
|
திரு. எச். எம. எஸ். பி. ஹேரத் |
2005.03.05 | 2006.05.02 |
|
திரு. எம். கே. முஹைஸ் |
2006.05.03 | 2007.11.18 |
|
திரு. எம். எச். எம். றியாழ்தீன் |
2007.11.19 | 2011.06.05 |
|
திரு. கே. பீ. ரங்கன பர்னாந்து |
2011.06.06 | 2015.07.08 |
|
திரு. எச். எம. எஸ். பி. ஹேரத் |
2015.07.09 | 2018.03.14 |
|
திரு. எம். எம். என். சோமதிலக |
2018.03.15 |















